புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது "கேலிக்கூத்தானது" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமரிசனம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சக்தி" என்பதற்குப் பதிலாக "கேலிக்கூத்து" என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மாநிலத்தில் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மிஸோரம், மணிப்பூா், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13 முதல் 15 வரை) மூன்று நாள்கள் பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ.71,850 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறாா்.
இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்கும் விதமாக நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிரதமர் நரேந்திர மோடி மிசோரம் பயணத்தை முடித்துக் கொண்டு மணிப்பூர் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணத்தை கேலிக்கூத்தானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமரிசனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் வருகை என்பது கேலிக்கூத்தானது என சனிக்கிழமை விமர்சினம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சக்தி" என்பதற்குப் பதிலாக"கேலிக்கூத்தானது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 7 ஆம் தேதி செப்டம்பர் 13 இல் மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று வருகின்றனர்.
ஆனால், அவர் மாநிலத்தில் சுமார் 3 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார் என்று தெரிகிறது. இவ்வளவு அவசரமான பயணத்தால் பிரதமர் மோடி என்ன சாதிக்க விரும்புகிறார்?. இது உண்மையில் 29 மாதங்களாக வேதனைகளுடன் அவருக்காகக் காத்திருக்கும் மாநில மக்களுக்கு ஒரு அவமானமாகும்.
மணிப்பூர் மக்கள் மீதான தனது அலட்சியத்தையும் உணர்வின்மையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள பிரதமர், செப்டம்பர் 13 மணிப்பூர் பயணம் உண்மையாக இருக்காது என தெரிவித்திருந்தார்
Summary
Congress General Secretary in-Charge Communications Jairam Ramesh on Saturday criticised Prime Minister Narendra Modi's upcoming visit to Manipur, saying it would be a "farce" rather than a "force for peace and harmony."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

மதவாத அரசியல் கேரளத்தில் எடுபடாது: காங்கிரஸ்

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி! தம்பி ராமையா, ரமேஷ் திலக் கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


