புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை (ஏப். 9) காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 37.06 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
துணநிலை ஆளுநர் வாக்குப்பதிவு
புதுச்சேரி துணநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவையை அடுத்துள்ள சுகாகாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது தாயார் லீனா, அவரது மனைவி பீனாவுடன் வந்து வாக்களித்தார். அவரது தாயார் லீனா சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது முதன்மையான கடமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
Summary
Puducherry Lieutenant Governor Kailashnathan casts his vote, accompanied by his wife
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

தமிழக ஆளுநர் பொறுப்பேற்றார் ராஜேந்திர ஆர்லேகர்!

காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம்: புதுவை துணைநிலை ஆளுநா்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


