மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என பிரதமர் கூறியிருப்பது...

News image

மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள் - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 4:24 am

புதுதில்லி: மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்தத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தென் மாவட்டங்கள் மீதான தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கான கதவுகளைத் திறக்குமா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது.

இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்

இந்த நிலையில், புதன்கிழமை(ஏப்.29) நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மேற்கு வங்க மக்கள் "சாதனை அளவில்" வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, பெண்களும் இளைஞர்களும் அதிகயளவில் வாக்களித்து, தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்திக்கொள்ளவது மிகவும் முக்கியமானது என று மோடி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில், 142 தொகுதிகளில் களத்தில் உள்ள 1,448 வேட்பாளர்களில் 1,228 பேர் ஆண்கள், 220 பேர் பெண்கள்.

இவர்களது அரசியல் விதியை 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3.21 கோடி போ் தீர்மானிக்க உள்ளனர்.

Summary

Prime Minister Narendra Modi appealed to the people of West Bengal to cast their votes in "record numbers" in the second phase of polling

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.