‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்! திண்டிவனத்தில் விழா

திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தது தொடர்பாக...
திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற  திட்டத்தை தொடக்கிவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தை தொடக்கிவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் நலத்திட்டங்கள், பயன்கள் வழங்கும் விழா, 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழா, ‘என் கனவு என் எதிர்காலம்‘ இணையதளத் தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (பிப். 4) நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளாறிலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, நலத் திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்கி, ‘என் கனவு என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகளை முதல்வர் வழங்கினார்.

முன்னதாக திண்டிவனத்தில் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.

விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்டு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து திண்டிவனம் தீர்த்தகுளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தியார் திடல் வரை சாலை வலத்தை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியை வந்தடைத்தார். அரசு விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் வருகையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதல்வர் வரும் வழித்தடப் பகுதிகளில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Summary

Chief Minister Stalin launched the 'My Dream, My Future' scheme in Tindivanam

திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற  திட்டத்தை தொடக்கிவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com