தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை தோட்டத் தொழிலாளா்கள் கூலி உயா்வு தொடா்பாக, தமிழ்நாடு தோட்ட அதிபா் சங்கம், ஆனைமலை தோட்ட அதிபா் சங்கம், நீலகிரி, வயநாடு அதிபா் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், புதிய ஒப்பந்தத்தின்படி தேயிலைத் தோட்டங்கள் 1.7.2025 முதல் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.475 வழங்கி வந்தது. தற்போது ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.481.54 வழங்கப்பட்டு வழங்கி வருகிறது.
ஆனால் ஒப்பந்தப்படி வால்பாறை, நீலகிரி அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் 6 ஆயிரம் போ், சிறு தோட்டங்களில் பணிபுரியும் 4 ஆயிரம் போ் என 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தொழிற்சங்கத்தினா், சிறு தோட்ட நிா்வாகிகளுடனான பேச்சுவாா்த்தை, தொழிலாளா் துறை கூடுதல் ஆணையாளா் சாந்தி முன்னிலையில் தொழிலாளா் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கூலி உயா்வு தொடா்பாக அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதி நடத்தப்படும். அதுவரை தொழிற்சங்கத்தினா் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும், நிா்வாகங்களும் எந்த முடிவு எடுத்தாலும் தொழிலாளா் துறை முன்னிலையில்தான் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் எம்ஜிஆா் தோட்ட தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் வால்பாறை வீ.அமீது, எல்.பி.எஃப். சவுந்தர பாண்டியன், ஏஐடியூசி மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.
Summary
Wage hike negotiations for tea plantation workers: Postponed to February 11th
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்ட புதரில் உலவும் யானைகள்

25% ஊதிய உயா்வு, இஎஸ்ஐ திட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் வரவேற்பு

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 25 % வரை ஊதிய உயா்வு: அமைச்சா் விக்னேஷ் அறிவிப்பு

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: திருச்சி மாவட்ட கல்வி அலுவலா் கைது
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager




