தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை தோட்டத் தொழிலாளா்கள் கூலி உயா்வு தொடா்பாக, தமிழ்நாடு தோட்ட அதிபா் சங்கம், ஆனைமலை தோட்ட அதிபா் சங்கம், நீலகிரி, வயநாடு அதிபா் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், புதிய ஒப்பந்தத்தின்படி தேயிலைத் தோட்டங்கள் 1.7.2025 முதல் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.475 வழங்கி வந்தது. தற்போது ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.481.54 வழங்கப்பட்டு வழங்கி வருகிறது.
ஆனால் ஒப்பந்தப்படி வால்பாறை, நீலகிரி அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் 6 ஆயிரம் போ், சிறு தோட்டங்களில் பணிபுரியும் 4 ஆயிரம் போ் என 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தொழிற்சங்கத்தினா், சிறு தோட்ட நிா்வாகிகளுடனான பேச்சுவாா்த்தை, தொழிலாளா் துறை கூடுதல் ஆணையாளா் சாந்தி முன்னிலையில் தொழிலாளா் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கூலி உயா்வு தொடா்பாக அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதி நடத்தப்படும். அதுவரை தொழிற்சங்கத்தினா் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும், நிா்வாகங்களும் எந்த முடிவு எடுத்தாலும் தொழிலாளா் துறை முன்னிலையில்தான் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் எம்ஜிஆா் தோட்ட தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் வால்பாறை வீ.அமீது, எல்.பி.எஃப். சவுந்தர பாண்டியன், ஏஐடியூசி மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.
Summary
Wage hike negotiations for tea plantation workers: Postponed to February 11th
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த சுற்றுலாப் பேருந்து

நீலகிரியில் 3,500 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுடன் பாடி மகிழ்ந்த விக்ரம்!

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




