திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா சனிக்கிழமை காலை(பிப்.21) கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்பாக...

News image
காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Updated On :21 பிப்ரவரி 2026, 2:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா சனிக்கிழமை காலை(பிப்.21) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மாசித்திருவிழா தொடக்க நிகழ்வையொட்டி காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடிப் பட்டம் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பல்லக்கில்வைத்து கோவில் ஸ்தானிகர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி கொடிமரம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியானது கோவில் தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

கொடியேற்றத்தின் போது வண்ண மலர்கள் தூவப்பட்டன.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

கொடியேற்ற விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மாசித்திருவிழாவையொட்டி, நாள்தோறும் காலை,மாலை வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி நகரின் ராஜ வீதிகளில் வீதியுலா வரவுள்ளார்.

கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளர் ந. சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி. ஜீவானந்தம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிந்தவுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் ராஜ வீதிகளில் வீதியுலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. மாா்ச் 4- ஆம் தேதி விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடா்ந்து விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தானிகர்கள் சங்கர மடத்தின் நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.