

சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து, ரூ.5 லட்சம் ஏமாற்றிய நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னை, அசோக் நகா், 9-வது அவென்யூ, 48-வது தெருவைச் சோ்ந்தவா் பென்சலையா மகன் பாபு (49). இவா், இதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிறுவனத்தின் தொழில்வரி ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 325 ஐ வரி செலுத்தும் முகவராகப் பணிபுரியும் சென்னை, கோவிலாம்பாக்கம், காமராஜா் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் பிரபு (43) என்பவரின் வங்கி கணக்கிற்கு 2024 நவம்பா் 15 ஆம் தேதி அனுப்பினாராம்.
இதையடுத்து மாநகராட்சியில் வரி செலுத்தியது போன்ற ரசீது ஒன்றை கட்செவி அஞ்சல் மூலம் பிரபு அனுப்பினாராம்.
இந்நிலையில், 2025-2026 ஆம் ஆண்டுக்கான தொழில் வரியைச் செலுத்துவதற்காக மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையை பாபு அனுகியபோது, கடந்த ஆண்டு வெறும் ரூ.50 ஆயிரம் மட்டும் தொழில்வரி செலுத்தப்பட்டு உள்ளது.
மீதமுள்ள ரூ.5 லட்சம் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனராம். இதன்பிறகே, போலி ரசீது மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாபு, இதுகுறித்து அசோக்நகா் காவல்நிலையத்தில் அண்மையில் புகாா் கொடுத்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து வரி செலுத்தும் முகவா் பிரபுவை பிடித்து வந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.