

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளருடன் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, மிகப்பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது. இந்த மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினை பாராட்ட வேண்டும்.
இந்த பெரிய அமைப்பு ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்போது, மற்ற இரண்டு அல்லது மூன்று அமைப்புகளைவிட முன்னிலையில் இருக்கும்.
இது திமுகவுடன் எங்களுக்கு இருக்கும் நீண்டகால உறவு. நாங்கள் (காங்கிரஸ் - திமுக) 2004 முதல் ஒன்றாக இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் சோனியா காந்தி உருவாக்கிய கூட்டணி. இது காலத்தின் பல்வேறு சோதனைகளிலிருந்து தப்பி வந்துள்ளது.
2014 தேர்தலைத் தவிர, ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் ஒன்றாகவே போட்டியிட்டுள்ளோம். எந்தவொரு உறவிலும் சிறிய உராய்வு இருக்கத்தான் செய்யும். மேலும், இந்த உராய்வு நியாயமானதாகவும் இருக்கும்.
ஆனால், அவையனைத்தும் எளிதில் சமாளிக்கப்படுகின்றன. நாம் ஒன்றாகத் தேர்தல்களைச் எதிர்கொள்ளும்போது அனைத்தும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.