திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் இணைவா் - டி.டி.வி. தினகரன்

News image

டி.டி.வி. தினகரன் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 5:01 am IST

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற வேண்டும். திமுக, காங்கிரஸ் இடையிலானது கொள்கைக் கூட்டணி கிடையாது. 35 முதல் 40 தொகுதிகள், கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் கோருகிறது. எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதே சந்தேகம்தான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. எங்களுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்ததுபோல, சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத திமுகவை வீழ்த்தும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓரணியில் இணைந்துள்ளோம்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.