தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற வேண்டும். திமுக, காங்கிரஸ் இடையிலானது கொள்கைக் கூட்டணி கிடையாது. 35 முதல் 40 தொகுதிகள், கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் கோருகிறது. எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதே சந்தேகம்தான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. எங்களுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்ததுபோல, சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத திமுகவை வீழ்த்தும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓரணியில் இணைந்துள்ளோம்.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் ஆட்சி என்று சொன்னாலும் லஞ்சம்! விவசாயிகள் வேதனை - டிடிவி தினகரன்

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தவெக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில்
காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



