தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற வேண்டும். திமுக, காங்கிரஸ் இடையிலானது கொள்கைக் கூட்டணி கிடையாது. 35 முதல் 40 தொகுதிகள், கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் கோருகிறது. எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதே சந்தேகம்தான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. எங்களுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்ததுபோல, சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத திமுகவை வீழ்த்தும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓரணியில் இணைந்துள்ளோம்.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக-அதிமுக கூட்டணி அமைய ஆசைப்பட்டாா் உதயநிதி! மாணிக்கம்தாகூா் எம்.பி.

ஆட்சி அமைய வழிவகுத்தவா்களின் நம்பிக்கையை சிதைப்பதா?தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தேர்தல் முடிவை முன்கணித்த பஞ்சாங்கம்.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைகிறதா?

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



