காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலை

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டது தொடர்பாக...

மீட்கப்பட்ட அம்மன் சிலை

Published On :

சூலூா்: சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டனா்.

சூலூா் அருகேயுள்ள அயோத்தியாபுரத்தில் அம்மன் சிலை ஒன்று சாலையோரத்தில் புதன்கிழமை இரவு கிடந்துள்ளது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சிலை எடுத்துவைத்து அங்கேயே வழிபாடு நடத்த முயற்சி செய்தனா்.

தகவல் அறிந்த சூலூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து, சிலையை மீட்க முயன்றனா். அப்போது, அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் உதவியுடன் சிலையை மீட்ட அதிகாரிகள், பாப்பம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

சிலையை மா்ம நபா்கள் வீசிச் சென்றனரா அல்லது பழங்கால சிலையா என்பது குறித்து அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

An Amman idol found lying on the roadside near Sulur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.