குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் நள்ளிரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்புவளைவைத்தாண்டி முதல் நடைபாலம் வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.
அதேபோன்று ஐந்தருவி, புலியருவி மற்றும் சிற்றருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும்,செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கடனாநதி அணைப் பகுதியில் 23.மி.மீ மழைப்பொழிந்துள்ளது.
களக்காடு தலையணையிலும் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துரையினர் தடை விதித்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியிலும் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Summary
Flooding at Courtallam waterfalls: Tourists banned from bathing
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











