எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வேலூரில் கல்லூரி மாணவன் அடித்துக் கொலை

வேலூரில் கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2026, 11:20 am IST

வேலூர்: வேலூரில் கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சக மாணவர்களை பிடிப்பதற்காக போலீஸார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பத்தியவரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் டேனி வல்லன் அரசு (19). இவர் வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் பி.ஏ.போர்த்திறனியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் 3-ஆவது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருடன் ஆரணி, இந்திரா நகர், தொந்திகரம் பட்டுவை சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), புதுச்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி ( 19). தருமபுரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகியோரும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த டிச.25-ஆம் தேதி தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து டேனி வல்லன் அரசுவும், கிஷோர் கண்ணனும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, புத்தாண்டு அன்று வேலூருக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நண்பர்கள் தங்கியிருந்த அறையில் டேனி வல்லன் அரசு கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் டேனி வல்லன் அரசு உடலை பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வைத்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள சித்தப்பாறை கிராம மலையடிவாரத்தில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே டேனி வல்லன் அரசுவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் மகனை கண்டுபிடித்து தருமாறு பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து டேனி வல்லன் அரசுவை தேடி வந்தனர்.

பின்னர் அவரது நண்பர் கிஷோர் கண்ணனை பிடித்து நடத்திய விசாரணையில் பார்த்தசாரதிதான் டேனி வல்லன் அரசுவை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பார்த்தசாரதி புதுச்சேரியில் பதுங்கி உள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து பார்த்தசாரதியை பிடிப்பதற்காக காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீஸார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,

பார்த்தசாரதிதான் டேனி வல்லன் அரசுவை கொலை செய்ததாக கிஷோர் கண்ணன் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்து வருகிறார். பார்த்தசாரதியை பிடித்தபிறகு தான் டேனி வல்லன் அரசு கொலையில் உண்மை விவரங்கள் தெரியவரும்.

டேனி வல்லன் அரசுவை இரும்புராடால் சர மாரியாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Regarding the incident in Vellore where a college student was beaten to death...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.