எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு! அமைச்சர்கள் தொடக்கிவைத்தனர்!

தச்சன்குறிச்சியில் நடைபெறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தது தொடர்பாக...

News image

தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியினை கொடி அசைத்து துவக்கி வைக்கும் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியர் மு.அருணா உள்ளிட்டோர்.

Updated On :3 ஜனவரி 2026, 1:32 pm IST

தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தசசன்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா். இதையடுத்து, அந்தத் தேதியில் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தச்சன்குறிச்சியில் உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள திடலை மாவட்ட ஆட்சியா் மு.அருணா அண்மையில் நேரில் பாா்வையிட்டு வாடிவாசல், விழா மேடை, காளைகள் ஓடுதளம், பாா்வையாளா்கள் மாடம் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி அமைக்க அறிவுறுத்தினாா். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அலுவலா்களிடையே வலியுறுத்தினாா். ஆட்சியா் அறிவுறுத்தலின்படியும், அரசு விதிமுறைகளின்படியும் முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியுள்ள தச்சன்குறிச்சியில்  வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகளை போட்டி போட்டு அடக்கும் மாடுபிடி வீரர்கள்.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியுள்ள தச்சன்குறிச்சியில் வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகளை போட்டி போட்டு அடக்கும் மாடுபிடி வீரர்கள்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை காளியம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட வாடி வாசலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை விகித்து ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை வாசித்தார்.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, திமுக மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் எம். பரமசிவம், மா.தமிழய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது, தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடுவதை மாடு பிடி வீரர்கள் சீறிவரும் காளைகளை தீரத்துடனும் வீரத்துடனும் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். இதில் சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி துள்ளி குதித்து ஓடி விடுகின்றன.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து கலந்து கொண்டுள்ளனர்.

மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி துள்ளி குதித்து ஓடும் காளைகள்.

மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி துள்ளி குதித்து ஓடும் காளைகள்.

ஜல்லிக்கட்டில் சிறந்த ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட மிதிவண்டி , மின்விசிறி, எவர்சில்வர் அண்டா, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

கால்நடைத்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் முகாம் அமைத்து சிகிச்சைகள் பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ம.ரமேஷ் காவல் ஆய்வாளர்கள் வனிதா, கோ.சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் மேனகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Summary

In Thachankurichi, the ministers flagged off Tamil Nadu's first Jallikattu event of the season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.