பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு...
Teachers arrested
போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைதுX
Updated on
1 min read

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்திய ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று(ஜன. 2) பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான போட்டா ஜியோ,

"சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினோம்.

ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு மற்றும் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை(ஜன. 3) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்" என்றார்.

Summary

Teachers arrested; MK stalins important announcement reg old pension scheme

Teachers arrested
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை! - ஜாக்டோ ஜியோ
Teachers arrested
சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com