முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயர் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது குறித்து...

News image

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம். - டிஎன்எஸ்

Updated On :1 மே 2026, 10:13 am IST

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயர் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை சுவாமி உள்புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரிகருட, யானை மற்றும் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 29-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் திருபல்லக்கு திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சித்திரை பௌர்ணமி நாளான வெள்ளிக்கிழமை காலை சுமார் 6 மணி அளவில் நடைபெற்றது.

இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் உற்சவர் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர், கோயில் பட்டாச்சாரியார் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோர் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை கோவிந்தா...என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

நாதஸ்வரம் தவில் மங்கள இசை, சிவ வாத்தியங்கள், செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க தேரானது மாட வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேர் சென்ற வழியெங்கும் நீர்மோர், குடிநீர் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர் மன்றத் தலைவர் க.ராஜேந்திரன், தொழிலதிபர் எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், வர்த்தக சங்க நிர்வாகிகள் டி.சண்முகம், வீரப்பன், மோகன கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாக்புப் பணியில் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை அகற்றி தேரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

Summary

Panruti Varadaraja Perumal Temple Chariot!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.