புதுச்சேரியில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 6 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்துள்ள முகவர்கள், அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள் காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனைத் தொடர்ந்து 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6 மையங்களில் இந்த தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்திற்குள் வரும் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்; குறிப்பாக செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த பணிகள் மிகவும் துல்லியமாக நடைபெற்று வருகின்றன.
Summary
Vote counting has begun in Puducherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு, தனியாா் ஐடிஐகளில் மாணவா் நேரடி சோ்க்கை

மாதனூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரம்
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



