ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கடும் வறட்சி களக்காடு தலையணை மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், களக்காடு தலையணை மூடல் குறித்து...

News image

களக்காடு தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி குறைந்து காணப்பட்ட நீா்வரத்து. - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 11:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி  நிலவுவதால், இங்குள்ள தலையணை ஆறு வறண்டது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், இங்குள்ள தலையணை ஆறு வறண்டது. இதனால், தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது.

களக்காடு புலிகள் காப்பகத்தில் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயில் ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் தலையணை ஆறு, நம்பி கோயில் நம்பியாற்றில் எப்போதும் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்தது.

இந்த நிலையில், மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவி நீர்வரத்து குறைவாக இருப்பதால் தற்போது தலையணை பச்சையாற்றில் தடுப்பணைக்கு உள்பகுதியில் குட்டை போன்று தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.

இதையடுத்து, களக்காடு துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்பேரில், தலையணை புதன்கிழமை(மே. 6) மூடப்பட்டது. அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே தலையணை ஆற்றில் நீர்வரத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்குள்பட்ட களக்காடு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதியில் மே.6 முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தும், பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

Summary

Severe Drought Forces Closure of Kalakkad Thalayani: Ban Imposed on Tourists

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.