இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற சண்டையானது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆசிம் முனீர் ஞாயிற்றுக்கிழமை(மே 10) தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்தாண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆபரேசன் சிந்தூர்’ ராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்கு பாகிஸ்தானும் எதிர்வினை தாக்குதல்களை நடத்தியது. 4 நாள்களாக நடைபெற்ற சண்டை அதன்பின் அமெரிக்கா தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவுக்கு எதிரான சண்டைக்கு ‘மார்க்கா-இ-ஹக்’ எனப் பெயரிடப்பட்டது. அதன் ஓராண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆசிம் முனீர், “இரு நாடுகளுக்கும் அல்லது இரு ராணுவங்களுக்கும் இடையே நடைபெற்ற மார்க்கா-இ-ஹக் வழக்கமானதொரு போரே அல்ல. ஆனால், நிஜத்தில் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தீர்க்கமானதொரு போர் அது” என்று குறிப்பிட்டார்.
Summary
Pakistan's Chief of Defence Forces Field Marshal Asim Munir on Sunday termed last year's conflict with India as a "battle between two ideologies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு: முதல்முறையாக சீனா ஒப்புதல்

7.5.1976: இந்தியா - பாக். பேச்சு அடுத்த வாரம் நடக்கும் - இஸ்லாமாபாத்தில் சந்திப்பு
இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டனர்: டிரம்ப்

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

