சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தான் முதல்வர் ஜோசப் விஜய் மௌனமாக இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவிச் சாயம் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் உதியநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருவிழா நிகழ்வில் காவி உடையணிந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,
எப்போதுமே மௌனத்தில் இருக்கரவர் முதல்வரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவிச் சாயம் பூசி இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
திமுக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டித்தோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாதிரி அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட அனுமதி கொடுங்கன்னு தில்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தான் முதல்வர் மைச்சர் மௌனமாக இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவிச் சாயம் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என கூறியுள்ளார்.
Summary
Thiruvalluvar Smeared with saffronizing Once Again... Why the Hesitation to Object? — Udhayanidhi Stalin Questions the Tamil Nadu Government!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீசாலும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதி ஸ்டாலின்

பயிர்க்கடன் தள்ளுபடி; நிறைய ஏமாற்றங்களுக்கு தயாராகணுமா சிஎம் சார்? - உதயநிதி ஸ்டாலின்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK




