மானுடத்தின் வலி நிறைந்த பக்கங்களை ஒருவரும் புரட்டிப் பார்க்க விரும்புவதில்லை. கண் முன்னே நிகழும் அவலங்களைக் கூட கடந்து போகிறவர்களாகவே நம்மில் பலர் இருந்து வருகிறோம்.
காரணம் அவசர உலகம், நம்மை நிற்க நிதானிக்க அடுத்தவர்களை கவனிக்க இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது என்று கூறுவோம்.
ஆனால் கலைஞர்களால் அப்படி இருக்க முடியாது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தை அழிக்கும் ரெளத்திரம் அவர்களுக்கு ஏற்படும்.
சம காலத்தில் நிகழும் சம்பவங்களை அந்தக் காலத்தின் பதிவாக அவர்களுடைய பேனா அல்லது தூரிகை அழுத்தமாக பதிந்துவிடும்.
குன்டஸ் அகயெவ் (Gunduz Agayev) எனும் ஓவியர் அத்தகைய காத்திரமான படைப்புக்களை தனது ஓவியங்கள் மூலமும் கேலிச்சித்திரங்களாகவும் படைத்து வருகிறார். ஒருவர். அவருடைய ஓவியங்கள் அனைத்தும் வித்யாசமானவை.
உண்மையை தனது ஓவியத்தின் மூலம் உரக்கச் சொல்வதில் குன்டஸ் தயங்கியதேயில்லை.
தனது தாய்நாடான அசர்பைஜானில் நிகழும் சமூக அநீதிகளை அவரது ஓவியங்கள் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தது.
அவரிடம் இருந்தது தூரிகையா அல்லது கண்ணுக்குத் தெரியாத சவுக்கா என்று புரியாத அசர்பைஜான் அரசு, அவரை நாடு கடத்தியது.
சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனாலும் குன்டஸ் அகயெவ் முடங்கிப் போய்விடவில்லை.
இன்னும் தீவிரமாக கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நேர்மையாகவும் தன் மனச்சாட்சிக்கு உட்பட்டும் இயங்கி வருகிறார்.
அவர் வரைந்த இந்தச் சித்திரங்களுக்கு விளக்கம் வேண்டியதில்லை. காரணம் உலகின் எந்த மூலையாக இருந்தாலும் அவை பொருந்தக் கூடியதே.
மேலும் சில ஓவியங்கள்,
***
***
***
***
ஓவியங்கள் / நன்றி - குன்டஸ் அகயெவ் (Gunduz Agayev)