47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க...

பெண்கள் பலருக்கும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும். இதனை அகற்ற வேதியியல் சிகிச்சை முறைகளை நோக்கி பயணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 11:02 am

தினமணி

பெண்கள் பலருக்கும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும். இதனை அகற்ற வேதியியல் சிகிச்சை முறைகளை நோக்கி பயணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது. 

ஆனால், எந்தவித பக்கவிளைவும் இன்றி இயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம். 

ஒரு டீஸ்பூன் கடலை மாவு எடுத்து அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும். 

முகத்தில் மட்டுமின்றி கைகளில், அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கவும் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம். 

அழகுப் பொருள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று கடலை மாவு. சோப்பு, ஷாம்பூ என செயற்கை ரசாயனங்கள் வருவதற்கு முன்னதாக முன்னோர்கள் குளிப்பதற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினர்.

எனவே முடியை அகற்ற லேசர் சிகிச்சைகளுக்கு பதிலாக இந்த இயற்கை முறையை முயற்சியுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.