முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க...
ஆலிவ் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி அழகுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.


ஆலிவ் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி அழகுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
சிலருக்கு சருமத்தில் மூக்கின் இடுக்குகளில் அல்லது மூக்கின் மேல் சொரசொரப்பாக கரும்புள்ளிகள் போன்று இருக்கும். இதற்கு இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சிறிது உப்பு கலந்து முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் நீரில் ஆவிபிடித்து சுத்தமான துணி கொண்டு முகத்தைத் துடைக்கவும். ஓரிரு முறை இவ்வாறு செய்தாலே முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய்ச் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது. முகம் மற்றும் உடலிலும் தடவி வர சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...