வாணலியை சூடாக்கி அதில் 1 டீஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும், உளுந்து சிவக்க பொரிந்த பின் அதில் கொத்துமல்லி விதை, நீட்டு மிளகாய் வத்தல் இரண்டையும் போட்டு கருகாமல் சிவக்க வறுக்கவும், இதனுடன் உறித்த பூண்டு மற்றும் காய்ந்த கறிவேப்பிலையையும் இட்டு மொறு மொறுவென வறுத்த பின் புளி அல்லது தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி விரைவாக வதங்க வேண்டுமெனில் அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து ஓரிரு முறைகள் கிளறி விட்டு இறக்கி ஆற விடவும். தக்காளிக்குப் பதிலாக புளி சேர்ப்பதாக இருந்தால் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கிளறி விட்டு இறக்கலாம்.