சென்னை முகப்பேரில் இருக்கும் வேலம்மால் முதன்மைப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் இன்று 10.11.16 அன்று ‘பிக் பேங்’ எனும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு நேரடிப் பரிச்சயமில்லாத பல்வேறு அறிவியல் ஆய்வுகள் செய்து காண்பிக்கப்பட்டன. மாணவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும்
பங்கேற்க வைக்காமல் அவர்களையும் அறிவியல் செய்முறைகளில் இணைத்துக் கொண்டு குதூகலத்தோடும், உற்சாகத்தோடும் பங்கேற்க வைத்தமை பாரட்டுதலுக்குரியதாக இருந்தது.
மாணவர்களும் யானைப்பசை, ஹோமோ போலார் மோட்டார், டிரை ஐஸ், பெர்னாலிக் கோட்பாடு, உராய்வு சோதனை, காற்றழுத்த விதி, ரூபன் குழாய், திரவநிலை நைட்ரஜனை வெடிக்க வைத்தல் உள்ளிட்ட அறிவியல் சோதனைகளில் ஆர்வமுடன் பங்கேற்று கண்டு களித்தனர். மாணவர்களின் ஒருமித்த உற்சாகமும், ஆர்வமும் நடந்து கொண்டிருப்பது ’அறிவியல் கண்காட்சியா’ அல்லது ’மேஜிக் ஷோவா’ எனும் பிரமிப்பூட்டும்படியாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியை எல்.எம்.ஈ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து வேலம்மாள் முதன்மைப் பள்ளி நிர்வாகம் நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.