தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆரோக்கியம் தான் மிகப் பெரிய பேங்க் பேலன்ஸ்!

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் எனில் உங்க்லது சுவாசம் மிக மிகக் குறுகியதாகவும், மேலோட்டமானதாகவும் இருக்கும். இது முற்றிலும் தவறான சுவாசமுறை. சுவாசம் ஒரே சீராக இருந்தால் தான் நமது நுரையீரல்

News image
Updated On :28 நவம்பர் 2016, 9:47 am

சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான நுரையீரலை வலியுறுத்தும் NAPCON 2016 எனும் நுரையீரல் தொடர்பான நோய்கள் குறித்த மாநாட்டின் சிறப்புத் தூதராக பாலிவுட் நடிகர் அனில் கபூர்  நியமிக்கப் பட்டுள்ளார். அது தொடர்பாக சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ஆர்ரோக்கியம் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ் என்று கூறினார். அதோடு பணத்தைக் கொண்டு நம்மால் தூய்மையான நுரையீரலையோ, தூய்மையான மனதையோ, தூய்மையான இதயத்தையோ எளிதில் விலைக்கு வாங்கி விட முடியாது என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடித்தால் மட்டுமே அவையெல்லாம் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் ‘தனது குடும்பத்தின் ஆரோக்கியம் என்று வரும் போது உடலாலும் சரி, மனதாலும் சரி தான் ஒரு முறைக்கு இருமுறை தீர ஆலோசித்து விட்டு பிறகே அந்தப் பொருட்களை வாங்கத் துணிவதாகவும், அதே சமயம் தனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று நம்பும் எதை வாங்கவும் தான் மறுமுறை யோசித்ததே இல்லை எனவும் அவர் தெரிவித்தார். எதெல்லாம் ஆரோக்கியமானதோ அவற்றை வாங்க கையெழுத்திட்ட பிளாங் செக் தரக் கூட தான் தயங்கியதே இல்லை என்று கூட அவர் தெரிவித்தார்.
தினமும் காலையில் விழித்தெழும் போது ஒவ்வொருவரும் முதலில் செய்ய வேண்டியது தங்களது சுவாசம் எப்படி இருக்கிறது என்பதைச் சோதிக்கும் வேலையைத் தான். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் எனில் உங்க்லது சுவாசம் மிக மிகக் குறுகியதாகவும், மேலோட்டமானதாகவும் இருக்கும். இது முற்றிலும் தவறான சுவாசமுறை. சுவாசம் ஒரே சீராக இருந்தால் தான் நமது நுரையீரல் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று பொருள். எனவே தினமும் முதல் வேலையாக உங்களது சுவாசம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதை முதல் வேலையாக வைத்துக் கொண்டு அதிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தை கணக்கிடுங்கள். ஏனெனில் ஆரோக்கியம் தான் மனிதனின் மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ்’ என்றும் அனில் கபூர் தெரிவித்தார். 
தற்போது அனில் கபூருக்கு வயது 59. இந்த வயதிலும் அவர் அலுப்பின்றி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதற்கு ஆரோக்கியம் குறித்த அவரது தெளிவான பார்வையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.