தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்கூல் அட்மிஷனுக்கு இனி கியூவில் நிற்கத் தேவையில்லை, ஆன்லைனில் அட்மிஷன் வாங்கலாம்!

டிஜிட்டல் யுகத்தில் பள்ளிகளுக்கான அட்மிஷன்களும் ஆன்லைனில் முடித்துக் கொள்ளலாம் என்பது பெற்றோரைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆசுவாசம் தரும் மாற்றமே!

News image
Updated On :31 ஜனவரி 2017, 7:54 am

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலே பள்ளி வளாகங்களில் புது அட்மிஷன்களுக்காக பெற்றோர் கூட்டம் களைகட்டும். இந்தமுறை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி வளாகத்தில் அதிசயத் தக்க வகையில் அப்படியான களேபரக் கூட்ட நெரிசல்களைக் காண முடியவில்லை. என்னவென்று விசாரித்ததில் இந்த ஆண்டிலிருந்து அவர்களது பள்ளியின் சில கிளைகளில் ஆன்லைன் அட்மிஷன் முறையை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். டி.ஏ.வி உள்ளிட்ட பிரபல தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் அட்மிஷன் முறைகளை மேற்கொள்வதற்கான மென்பொருள் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கிறது ஸ்கூல் ஸ்கீஸ் எனும் நிறுவனம். இதன் அமைப்பாளர் ஜெகதீஷ் தேவராஜன். 

கோல சரஸ்வதி பள்ளி, டி.ஏ.வி, ஸ்பார்ட்டன் உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முதல் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறை செயல்படுத்தப் படவிருப்பதாகவும், மேலும் பல பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைய ஆர்வமாக விசாரித்து வருவதாகவும், கூடிய விரைவில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படலாம், இதனால் பெற்றோர்களின் அட்மிஷன் அலுப்பு தீர்ந்து அவர்களுக்கு பள்ளி துவக்க நாட்களுக்கான டென்சன் குறையும் என தேவராஜன் தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறையில் அப்ளிகேஷன் ஃபார்ம்களை நிரப்புவதில் பெற்றோர்களுக்கு சந்தேகங்கள் வரின், உதவும் பொருட்டு சாட் அவுட்புட் விண்டோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பெற்றோர் எளிதாக தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு ஃபார்ம்களை நிரப்பு பதிவு செய்யலாம்.

கரண்ட் பில், மளிகை பில், கிரெடிட் கார்டு பில் முதற்கொண்டு அனைத்தையுமே ஆன்லைனில் உட்கார்ந்த இடத்திலிருந்தே கட்டிமுடிக்கும் வசதியுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் பள்ளிகளுக்கான அட்மிஷன்களும் ஆன்லைனில் முடித்துக் கொள்ளலாம் என்பது பெற்றோரைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆசுவாசம் தரும் மாற்றமே! அடுத்த ஆண்டு துவக்கத்துக்குள் சென்னை பள்ளிகள் அனைத்திலுமே இந்த முறை செயல்பாட்டுக்கு வந்து விடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.