ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இந்தியாவுக்கு 131 ஆவது இடம்!

இந்த தரவரிசைப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 147-ஆவது இடத்திலும், வங்கதேசம் 139-ஆவது இடத்திலும் உள்ளது.இலங்கை 73-ஆவது இடத்தையும், மாலத்தீவுகள் 105-ஆவது

News image
Updated On :23 மார்ச் 2017, 6:24 am

DIN

மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இந்தியா மிகவும் பின்தங்கி 131-ஆவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையானது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

188 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், இந்தியா மிகவும் பின்தங்கி 131-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாலின விகிதம், மக்களின் சராசரி ஆயுட்காலம், பாதுகாப்பு, அரசின் மீதான நம்பிக்கை, நீதித்துறை செயல்பாடுகள், பேறுகால மரணம், கல்வி நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, வாழ்க்கைத் தரம் திருப்திகரமாக அமைந்திருப்பதாக 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்களின் சராசரி ஆயுட்காலம் 68.3-ஆக உள்ளது. நாட்டில் பாதுகாப்பாக உணர்வதாக 69 சதவீம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.

சமூகத்தில் விரும்பியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருப்பதாக 78 சதவீத ஆண்களும், 73 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர். அதேபோல், அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக 69 சதவீதம் பேரும், நீதித்துறை மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதாக 74 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற அம்சங்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு 131-ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 147-ஆவது இடத்திலும், வங்கதேசம் 139-ஆவது இடத்திலும் உள்ளது.
இலங்கை 73-ஆவது இடத்தையும், மாலத்தீவுகள் 105-ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. சீனா 90-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.