திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இப்படி எல்லாம் தலை சீவினால் முடி உதிராது!

தலைக்கு குளித்தவுடன் ஈரமாக உள்ள கூந்தலை சீவக் கூடாது.  ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும்

News image
Updated On :16 செப்டம்பர் 2018, 6:21 am

DIN


தலைக்கு குளித்தவுடன் ஈரமாக உள்ள கூந்தலை சீவக் கூடாது.  ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும்.  இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வந்துவிடும்.

தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி சீவ வேண்டும். கூந்தலும், தலைச் சருமமும் ஒன்றல்ல. ஆகவே தலைச்சருமத்தில் நன்கு படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால்  தூண்டப்பட்டு  முடி நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும்போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே  முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பத்தில் இருந்து சீவினால்  கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது.  நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர்.   அதுபோன்று கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது பிளவுபட்டு  வளர்ச்சி தடைப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.