76 வயது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. அவரைப் பார்க்க 97 வயதான அவரது அம்மா வருகிறார். இளைமையாக இருக்கும் போது உடல்நலக் குறைபாடு என்றாலே நம்மால் தாங்க இயலாமல் அப்படியே வதங்கிப் போய் வீட்டில் கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறிக் கொண்டு இருப்போம். உடல்நிலை சரியானால் தான் குணநலமும் சீராகும் என்ற நிலை தான் பலருக்கு. உடல் உபாதைகள் அத்தனை படுத்தி எடுக்கும். ஒருவழியாக உடல் உபாதைகள் விடைபெற்றால் மட்டுமே மனதளவில் சாந்தம் கிடைக்கும் நமக்கு மட்டுமல்ல வீட்டிலுள்ள நம்மைச் சார்ந்தோர் அத்தனை பேருக்கும் தான். அப்படி இருக்க இந்தப் பாட்டிக்கு 76 வயதில் ஏதோ உடல்நலக் கோளாறு. நடமாட்டமில்லாமல் உண்பதும், உறங்குவதும் படுக்கையிலேயே எனும் நிலையாகி விட்டது போலும். வீட்டில் அவரைக் கவனித்துக் கொள்ள பிள்ளைகள், கணவர், பேரன், பேத்திகள் என பல உறவுகள் இருக்கலாம். ஆனால் உள்ளூர அவரது மனம் நாடியிருந்தது அவரது அம்மாவின் வருகையை மட்டுமே. 76 வயதான தனக்கே உடல் உபாதைகள் இப்படிப் படுத்தி எடுக்கும் போது 97 வயதான தனது அம்மாவால் எப்படித் தன்னை வந்து காண முடியப் போகிறது? அம்மாவெல்லாம் இங்கே வரமாட்டார் என்ற ஏக்கத்தில் இருந்திருப்பார் போலும்... ஆனால், சர்ப்ரைஸாக அவரது வயோதிக அம்மா தன் மகளைப் பார்க்க ஓடோடி வந்தே விட்டார் எனும் போது அம்மாவைக் கண்டதும் அவரது உணர்வு வெளிப்பாட்டைப் பாருங்கள்...
ம்மா... என்ற அவரது அழைப்பில் ஓராயிரம் அர்த்தங்கள்...
உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே முதல் உறவு. பிறகு தான் மற்றவர்களைப் பட்டியலிட முடியும்.
இந்த நெகிழ்வான வீடியோ முகநூலில் பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருந்தது. எத்தனை முறை பகிர்ந்தாலும் பகிரத் தகுதியான வீடியோ தான் இது!
Related Article
ஸ்ரீதேவி குறித்த தங்களது நினைவுகளை #missyousridevi ஹேஷ்டேக் மூலமாக வாசகர்கள் பகிரலாம்.
பலே திருடர்களும், தோல்வியில் முடிந்த திருட்டும்! வைரலாகும் லைவ் வீடியோ!
ஜப்பான் இளவரசியின் திருமண ஒத்தி வைப்புக்கான காரணம்?!
மக்களே உஷார்! கொலை, கொள்ளைக்கான புதுப்புது உத்திகளுடன் நடு நிசியில் காத்திருக்கும் திருடர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



