மேம்பாலத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

இந்த விபத்துக் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
மேம்பாலத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்
Updated on
1 min read

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சாலை நடுவில் இருந்த டிவைடரில்  கார் மோதியதில் எர்ரகடா-பரத்நகர் மேம்பாலத்திலிருந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அனைவரும் நண்பர்கள். ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மூசாபேட்டிலிருந்து எர்ரகடாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

போலீஸாரின் தகவலின்படி, நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, டிவைடரைத் தாக்கி, ஃப்ளைஓவரிலிருந்து விழுந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com