ஆன்லைன் வகுப்புக்காக ஏழைக் குழந்தைகளுக்கு டிவி நன்கொடையாக அளித்தவர்!

தெலங்கானா மாநிலம் பெதப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கொடுருபகா கிராமத்தில் வசிக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக  ஒரு தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 
ஏழைக் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்கு டிவியை நன்கொடையாக அளித்த நபர்
ஏழைக் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்கு டிவியை நன்கொடையாக அளித்த நபர்
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் பெதப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கொடுருபகா கிராமத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள நிட்டூர் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 7 ஆம் வகுப்பு படித்து வரும் சௌமியா, மேக்னா ஆகிய இரு குழந்தைகள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடிசை வீட்டில் வசிக்கிறார்கள். 

இரண்டு சிறுமிகளுக்கும் படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், அவர்கள் வீட்டில் தொலைக்காட்சியோ, ஸ்மார்ட் போனோ இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்குகொள்ள முடியவில்லை. இதனால் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். 

இவர்களின் சூழ்நிலை, ஆசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, ​ கணித ஆசிரியர் திருப்பதி ராவ் மற்றும் தலைமை ஆசிரியர் எம். லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் உதவிக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜோகினிபள்ளி சீனிவாஸ் ராவ் என்பவரை தொடர்பு கொண்டனர். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு அந்த குழந்தைகளுக்கு தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

கரோனா பொதுமுடக்க காலத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தரப்பு மக்களுக்கு மற்றொரு தரப்பினர் உதவுவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com