உடல் இயக்கம் குறைந்து உடல் பருமன் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. உடல் பிரச்னைகளைத் தவிர்க்க தற்போது உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகியுள்ளது.
உடலுடன் மனநிலையை சரியாக வைத்துக்கொள்ளவும் தினமும் 30 நிமிடமாவது லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் காணப்படும் சூழ்நிலையில் பல்வேறு நோய்களைத் தவிர்க்க தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஏனெனில், உடல் பருமன் பிரச்னையால் நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்டவை தாக்குகின்றன.
அதுபோல மன அழுத்தமும் தற்போது அதிகமாகக் காணப்படும் சூழ்நிலையில் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தையும் குறைக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்கிறதா 'வைட்டமின் டி'?

எளிதான பயிற்சிகள்
உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்கு சென்று கடினமாக ஒர்க்-அவுட் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.
மிகவும் எளிதாக தினமும் காலை அரை மணி நேரம் நடக்கலாம். முடிந்தவர்கள் சிறிது நேரம் ஓடலாம். அலுவலகத்திற்குச் செல்லும்போதோ அல்லது வெளியில் செல்லும்போது முடிந்தவரை நடக்கலாம். லிப்ட்டுக்குப் பதிலாக மாடிப்படிகளை பயன்படுத்தலாம். இதுபோன்று அவ்வபோது உடல் இயக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இளைஞர்கள் அல்லது செய்ய முடிந்தவர்கள் ஸ்க்வாட், பிளாங்க் போன்ற வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஸ்கிப்பிங், விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
உடல் எடையைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடத்தல், ஓடுதல் உள்ளிட்ட பயிற்சிகளே போதுமானது.
பெண்களுக்கு நேரம் இல்லை என்றாலும் வீட்டு மொட்டை மாடியில் நேரம் கிடைக்கும்போது சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். போதுமானது. எனினும் காலையில் நடத்தல் கூடுதல் பலனைத் தரும். இத்துடன் பொருந்தா உணவுகளைத் தவிர்த்து சத்தான உணவுகளை எடுத்து உடல் பருமன் இருப்பவர்கள் கொஞ்சம் டயட் மேற்கொள்ளுங்கள்.
அனைவருமே தினமும் 30 நிமிடமாவது லேசான உடற்பயிற்சி செய்தால் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிக்க | செலவே இல்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



