தலைவலி.... உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்னை. தலைவலி வந்தாலே ஒருவேளையும் ஓடாது. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு ஏன் தலைவலி வருகிறது என்று கூட கண்டறிய முடியாது.
இந்த தலைவலிக்கு உணவுகள் கூட காரணமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது சில உணவுகளைச் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும்.
என்னென்ன உணவுகள்? பார்க்கலாம்!
♦ சீஸ் அதிகம் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். தைரமைன் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து தலைவலியை ஏற்படுத்துகிறது.
♦ ரெட் ஒயின் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். அதிகம் எடுத்துக்கொண்டால் தலைவலி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
♦ சாக்லெட்டிலும் தைரமைன் இருப்பதால் அதிகம் சாப்பிட்டால் தலைவலிக்கு ஆளாகலாம்.
இதையும் படிக்க | தீராத தலைவலியா? இயற்கையாக சரிசெய்ய 5 எளிய வழிகள்!
♦ செயற்கையாக தயாரிக்கப்பட்ட இனிப்பு மாத்திரைகளை சாப்பிட்டால் தலைவலி வரும்.
♦ உங்களுக்கு பால் வாசனை பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் பால் குடித்தால் தலைவலி ஏற்படும். பொதுவாக ஒவ்வாத வாசனைகள் அடங்கிய உணவுப் பொருள்களை உட்கொண்டால் தலைவலி ஏற்படும்.
♦ அதுபோல சிலருக்கு எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். அதில் உள்ள ஆக்டோபமைன் தலைவலியை ஏற்படுத்தும்.
♦ அதுபோல சிலருக்கு தயிர், நிலக்கடலை ஆகியவையும் தலைவலியை உண்டாக்கலாம்.
♦ எனவே, தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் இந்த உணவுகளைத் தவிர்த்துப் பார்க்கலாம். தொடர்ச்சியாக தலைவலி ஏற்படும்பட்சத்தில் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க... இந்த 6 வெள்ளை உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்!

Journalist Durai karuna interview | விஜய் குறுக்கிட்டுப் பேசும் நாள் ?| CM Vijay | TVK | TN Assembly

பச்சைக் குத்தி போராட்டம்! சீனாவுக்கு எதிராக களமிறங்கிய திபெத் இளைஞர்கள்!

ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்
விடியோக்கள்

Journalist Durai karuna interview | விஜய் குறுக்கிட்டுப் பேசும் நாள் ?| CM Vijay | TVK | TN Assembly



