டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட் எனும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பீட்சா, பர்கர், பிரென்ச் பிரைஸ், கேக், சாக்லேட், பப்ஸ், பிரைடு சிக்கன், பிரெட்ஸ் ஆகியவற்றில் இந்த நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவுகளை நீண்ட நாள் கெட்டுப்போகாமல் பதப்படுத்திவைக்க உதவுகிறது.
இந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக இதய நோய் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
இதையும் படிக்க | இளமையாக இருக்க வேண்டுமா? 30 வயதுக்குப் பின் இதெல்லாம் சாப்பிடுங்கள்!
அதில், 'வணிக ரீதியாக தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், பொதுவாக பேக் செய்யப்பட்ட உணவுகள், கேக் உள்ளிட்ட பேக்கிங் உணவுகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் காணப்படுகிறது. இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 5,40,000 பேர் இறக்கின்றனர். நிறைவுறா கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது இறப்பு அபாயத்தை 34%, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை 28% அதிகரிக்கிறது.
இது கொழுப்பு அளவுகளில் மாற்றத்தினால் ஏற்படும் விளைவாக இருக்கலாம்: இது கெட்ட கொழுப்பை( (குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம்) அதிகரித்து நல்ல கொழுப்பின்(உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம்) அளவைக் குறைக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் 4.6% கரோனரி இதய நோய் இறப்புகள், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
உணவுப் பொருட்களில் நிறைவுறா கொழுப்பு அமிலங்களின் அதிகபட்ச வரம்பு 2 சதவீதத்துக்கு மிகாமல் குறைக்க சட்டங்கள் திருத்தப்பட்டு 2022, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


