கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

குளிர்பானங்களில் பயன்படுத்தும் செயற்கை இனிப்பினால் புற்றுநோய் ஏற்படுமா?

குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு, புற்றுநோயை ஏற்படுத்தலாம் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:33 pm IST

குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு, புற்றுநோயை ஏற்படுத்தலாம் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை இனிப்பான்கள் உள்ள குளிர்பானங்களை இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற சமூக வலைத்தளம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல்வேறு தரவுகளை வெளிகொண்டுவந்துள்ளது. 

இதற்காக நாட்டில் 295 மாவட்டங்களில் சுமார் 23,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மூன்றில் ஒருவர், டயட் சோடா, சூயிங்கம் ஆகியவற்றின் மூலமாக செயற்கை இனிப்பான்களை எடுத்துக்கொள்கின்றனர். 

26% பேர் செயற்கை குளிர்பானங்கள் மூலமாகவும் 18% பேர் இனிப்பில்லா சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் மூலமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். 

ஒவ்வொரு மாதமும் 38% இந்தியர்கள் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை அருந்துகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், ஆனால் ​​91 சதவீதம் பேர், செயற்கை இனிப்புகளின் பயன்பாட்டை உணவுப்பொருள் அட்டையின் முன்புறத்தில் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு கலந்த டயட் சோடா மற்றும் சர்க்கரை இல்லாத உணவுப் பொருள்களை சாப்பிடும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளது. குறிப்பாக கல்லீரல், மார்பகம், ரத்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

அஸ்பார்டேம் என்பது ஒரு செயற்கை (ரசாயன) இனிப்பு. இது 1980களில் இருந்து பல்வேறு உணவு மற்றும் குளிர்பான தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குளிர்பானங்கள், சூயிங்கம், ஜெலட்டின், ஐஸ்கிரீம், தயிர், தானியங்கள், பற்பசை ஆகிய பொருள்களிலும் இருமல் மருந்துகள் மற்றும் மெல்லக்கூடிய வைட்டமின்கள் போன்ற மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு கேன் டயட் சோடாவில் சுமார் 200 முதல் 300 மில்லிகிராம் அஸ்பார்டேம் உள்ளதாகவும் சராசரியாக 70 கிலோ எடையுள்ள ஒருவர் 9 முதல் 14 கேன்கள் வரை பாதுகாப்பாக உட்கொள்ளலாம் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், அதேநேரத்தில் மக்கள் இனிப்பு உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.