மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கண் பார்வை: சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

கண் பிரச்னைகள் வராமல் தடுக்க சில குறிப்பிட்ட உணவுகளை கண்டிப்பாக தொடர்ந்து சாப்பிட வேண்டும். 

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2023, 4:31 pm IST

உடலில் உணர்திறன் வாய்ந்த உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். உலகின் அழகைக் காண உதவும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் இன்று பலருக்கும் கண் ரீதியான பிரச்னைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை/தூரப்பார்வை ஏற்பட்டு கண்ணாடி அணியும் சூழல் ஏற்படுகிறது.

கண் பிரச்னைகள் வராமல் தடுக்க சில குறிப்பிட்ட உணவுகளை கண்டிப்பாக உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். 

வைட்டமின் ஏ: கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியம். கேரட், கீரைகள், மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் க்ரீம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். 

ரிபோபிளேவின்: சோயாபீன்ஸ், பன்னீர், புரோக்கோலி ஆகியவற்றில் வைட்டமின் பி2 அல்லது ரிபோபிளேவின் நிறைந்து காணப்படுகின்றன. 

கால்சியம்: பாதாம், வால்நட், ராஜ்மா, ஓட்ஸ் ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

வைட்டமின் இ: இலை காய்கறிகள், முழு கோதுமை, முந்திரி பருப்பு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

ஒமேகா 3 : டூனா, கானாங்கெளுத்தி மீன், ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் ஆகிய ஒமேகா 3 உள்ள உணவுப் பொருள்களும் கண் பார்வையை மேம்படுத்தும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.