தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மாத்திரை இல்லாமல் தலைவலி குணமாக வேண்டுமா?

மாத்திரை இல்லாமல் தலைவலி குணமாக வேண்டுமா? இதோ சில தகவல்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 5:57 pm IST

தலைவலி.. இது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். போகலாம். வந்தால் ஏன் வந்தது என்ற காரணத்தைக் கேட்கவும் முடியாது. போய்விடு என்று கட்டளையிடவும் முடியாது.

ஆனால், சிலர், இந்த தலைவலியைப் போக்க பல வழிகளைக் கையாள்கிறார்கள். சிலர் தலைவலியோடு வாழவே பழக்கிவிட்டிருக்கிறார்கள்.

எப்படியும் தலைவலி ஒரு கட்டத்தில் போய்விடும்தான். ஆனால், அதுவரை இருக்கும் வேலைகளை தலைவலியோடு செய்ய வேண்டும் என்றால் அதுதான் தலைவலிக்கெல்லாம் தலைவலி.

இப்படிப்பட்ட தலைவலியை மாத்திரை மருந்து இல்லாமல் போக்க சில வழிமுறைகள் இருக்கிறதாம். உடல்நல நிபுணர்கள் அதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சிலர்.. சூடாக தேநீர் அருந்தினால் தலைவலி போய்விடும் என்கிறார்கள். அவர்களின் மனதுக்கு ஏற்ப சில நேரங்களில் ஓடியே போய்விடத்தான் செய்கிறது.

சிலர், தலைவலியோடு தூங்கச் சென்றுவிடுகிறார்கள்.

தலைவலி என்றால் அதற்கு கைவந்த கலை, தைலம்தான். ஏதோ ஒரு தைலத்தைத் தலையில் தேய்த்துக்கொண்டு ஓய்வெடுத்தால் ஒரு வழியாக தலைவலி போய்விடும் என்கிறார்கள்.

தலையை நன்கு அழுத்திப் பிடித்து மசாஜ் செய்தால் சில வகை தலைவலிகள் ஓடிவிடும். சிலருக்கு மிக அழுத்தமாக கயிற்றால் தலையைக் கட்டிக்கொண்டால் தலைவலி பறந்துவிடும்.

திடீரென பயங்கரமாக தலை வலித்தால் கழுத்துப் பகுதியில் ஒத்தடம் அல்லது கைகளால் பிடித்துவிட்டாலும், தலைக்கு ரத்த ஓட்டம் சீராகி தலைவலி சரியாகிறதாம்.

சிலருக்கு உடலில் போதிய தண்ணீர்ச்சத்து இல்லாமலும் தலைவலிக்கலாம். அப்படியிருந்தால் நன்கு தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தினாலும் தலைவலி சரியாகலாமாம்.

சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு பசியில் தலைவலி வந்துவிடும். அவர்களுக்கு உணவே மருந்து.

ஏதேனும் பிரச்னை அல்லது குழப்பத்தின்போது தலைவலி ஏற்பட்டால், இருக்கும் இடத்திலிருந்து வெளியேறி சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். பாடல் கேட்பது போன்றவை மனதை எளிதாக்கும். அப்போது தலைவலிக்கு நிவாரணம் தேடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.