25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மாதவிடாய் காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மாதவிடாய் காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Published On :23 பிப்ரவரி 2024, 2:54 pm IST

மாதவிடாய் காலங்களில் பொதுவாகவே உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி பகுத்துப் பார்க்கவே முடியாத உணவுகளைத்தான் இளம்தலைமுறையினர் சாப்பிடுகிறார்கள்.

மற்ற நாள்களில் என்றால் பரவாயில்லை.. மாதவிடாய் காலங்களில் பெண்கள் சில உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது என்கிறார்கள் உடல்நல நிபுணர்கள்.

அவர்கள் கூறும் பட்டியலில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தால்..

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை பெண்கள் இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் தவிர்க்கலாம். இது செரிமானப் பிரச்னைக்கும் வழிவகுக்கும்.

அதிக இனிப்புப் பண்டங்களை சாப்பிடாமல் தவிர்க்கலாம். இதனால், மாதவிடாய் வேளையில் ஏற்படும் மூட் ஸ்விங் அதிகம் ஏற்படக் காரணமாகிவிடுமாம்.

அதிகம் காபி குடிப்பதை தடுக்கலாம். இது உறக்கத்தை பாதித்து ஓய்வு எடுப்பதைக் குறைக்கலாம்.

அதிகக் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். செரிமானத்துக்கு எளிதான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பால் பொருள்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், இதனால், வயிற்று வலியுடன் வாந்தி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

உப்புத் தன்மை அதிகம் கொண்ட சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால், அதனால் ரத்தத்தில் அழுத்தம் சற்று அதிகரித்து ஏற்கனவே இருக்கும் அசதி போன்றவற்றை அதிகரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.