கோடை வெய்யில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்தாலும் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு வெய்யிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கோடையில் சருமத்தைப் பராமரிப்பது என்பது சவாலான காரியம்தான். அந்த வகையில் கோடை வெய்யிலில் சருமப் பிரச்னைகளுக்கு ஐஸ் க்யூப் (ஐஸ் கட்டி)உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெய்யில் காரணமாக, சருமம் கருமையாக பொலிவிழந்து காணப்பட்டால் ஐஸ் க்யூப் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். சிலருக்கு அதிக உணர்திறன் கொண்ட சருமமாக இருந்தால் நேரடியாக ஐஸ் கட்டியை வைக்காமல் துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
இது சரும எரிச்சலை, வீக்கத்தைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால் வெய்யிலுக்கு இதமாக இருக்கும். மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
இதேபோல ரோஸ் வாட்டர், கற்றாழை, வெள்ளரிக்காய் போன்ற பொருள்களையும் பயன்படுத்தலாம். மஞ்சளுடன் தயிர் அல்லது பால் சேர்த்து பயன்படுத்தலாம்.
இவற்றில் உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற ஏதேனும் ஒரு பொருளைத் தேர்வு செய்து அந்தச் சாறை /கலவையை ஐஸ் க்யூப் பெட்டியில் ஊற்றி வைத்து கெட்டியானபிறகு, தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். கோடை காலம் என்பதால் குளிர்ச்சி சருமத்துக்கு இதமாக இருக்கும்.
இந்த பொருள்கள் எல்லாம் சரும எரிச்சலுக்கும் தீர்வாக இருக்கும். சருமம் புத்துணர்ச்சி பெறும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Summary
Ice cube therapy to beat summer skin problems
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









