என் சம வயதினர், பகலில் பள்ளிக்குச் சென்று மாலை வேளைகளில் விளையாடிக் கொண்டிருக்க... அம்மாவுடன் நானும், என் தங்கையும் நீதி மன்றங்களின் படிகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். அதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லியில் இருக்கும் உச்ச நீதிமன்றம் வரவேண்டி வந்தது. அம்மா, அப்பாவின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் தீவிரமாக இருந்தார். வாரணாசி கருவூலத்தில் பணி புரிந்து கொண்டு என்னையும் தங்கையையும் படிக்க வைத்தார். வழக்கையும் நடத்தினார். நீதிமன்றத்திற்கு சென்று வருவதால் அலைச்சல், கவலை, துக்கம். அது புற்று நோயாக மாறியது. விதி இப்படி விளையாடும் என்று கனவிலும் நினைக்கவில்லை.