நீங்கள் சாப்பாட்டுப் ப்ரியரா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

தினமும் மூன்று வேளை அல்லது எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
நீங்கள் சாப்பாட்டுப் ப்ரியரா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

தினமும் மூன்று வேளை அல்லது எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சாப்பிட உட்காரும் பொழுதிலிருந்து சாப்பிட்டுக் கைகளை கழுவும் வரை சில நடைமுறைகள் கடைப்பிடிப்பது நல்லது.

சாப்பிடும் முன் முதலில் கை, கால், வாய் ஆகியவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே சாப்பிடத் தொடங்கிவிட வேண்டும்.

உங்களுக்கு வயிற்றுப் பொருமல் இருந்தாலோ பசி இல்லாத நிலையிருந்தாலோ சாப்பிட வேண்டாம். எப்போது நன்றாக பசிக்கிறதோ அப்போது சாப்பிட்டால் போதும். 

சாப்பாடு பரிமாறுபவர்கள் இலை அல்லது தட்டில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 

சாப்பிடும் போது சத்தமாகப் பேசக் கூடாது, முடிந்தால் மெளனமாக சாப்பிடுதல் நல்லது. புத்தகங்களைப் படிக்கக் கூடாது. டிவி மொபைல் ஆகியவற்றை நோக்காமல் தட்டைப் பார்த்து ரசித்து ருசித்து நன்றாக மென்று உணவை உட்கொள்ள வேண்டும்.

சாப்பிடுகையில் இடது கையை கீழே ஊன்றியபடி சாப்பிடக்கூடாது.

செருப்பு அல்லது ஷூ அணிந்தபடி சாப்பிடக் கூடாது.

அந்தி சந்தி வேளைகளில் சாப்பிடக் கூடாது. அதாவது காலையில் சூரிய உதயத்தின் போதும், மாலையில் அது மறையும் போதும் உணவினைத் தொடக் கூடாது.

உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம், செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் அப்போது வேண்டாமே!

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.

வெளிநாட்டவரிடமிருந்து நாம் பழகிய பஃப்பே சிஸ்டம் ஒத்துவராது. ஒருபோதும் நின்று கொண்டு சாப்பிடவே கூடாது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போதோ, கோபமான மனநிலையிலோ உணவை சாப்பிடாதீர்கள். அது உடல்நலத்துக்கு கேடு.

சாப்பிடும்போது தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் சாப்பிடக் கூடாது. தட்டை கையில் ஏந்தியபடி சாப்பிடாதீர்கள். தரையில் வட்டிலை வைத்து சாப்பிடுவதே நல்லது.

தட்டை வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை நக்கி சாப்பிடுவதும் நாகரிகமான செயல் அல்ல. மேலும் சாப்பிடும் போது உணவு ருசியாக இருக்கிறதே என்று அதிகமாக சாப்பிடக் கூடாது. வயிறு புடைக்க மூச்சு முட்ட ஒருபோதும் சாப்பிடக் கூடாது. 

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்த பின்னரே பழங்களை சாப்பிட வேண்டும். உணவுடன் ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சேர்த்து ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. 

எச்சில் தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 

இரவு நேரத்தில் கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய், இஞ்சி, முட்டை மற்றும் செரிமானம் ஆக கடினமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com