தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டியில் 'பட்டுப்புடவை' பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

உங்களது பதிவுகள் வழியாக அறிமுகமாகவிருக்கும் வெற்றிக்கு வித்திட்ட பெண்களில் சிறந்த மூவருக்கு தினமணி இணையதளத்தின் சார்பாக பட்டுப்புடவை பரிசுகள் உண்டு.
தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டியில் 'பட்டுப்புடவை' பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
Published on
Updated on
2 min read


தினமணி மார்ச் மாதப் போட்டியில் 'பட்டுப்புடவை' பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

நான் வாழ்க்கைல ஜெயிச்சதுக்கு காரணம் ‘இவள்’தான்! அப்படியொரு பெண் உங்க வாழ்க்கையில் உண்டா?!

ஆண்களே! உங்களது வாழ்வில் வெற்றிக்கு வித்திட்ட பெண்களின் பெயரை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமிது.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம். அதையொட்டி தினமணி மாதாந்திரப் போட்டிக்கான தலைப்பாக ‘காரியம் யாவிலும் கைகொடுப்பாள்’ எனும் தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறோம்.

மார்ச் மாதம் 8 ஆம் தேதியை உலகப் பெண்கள் தினமாக ஐ.நா. அறிவித்திருக்கிறது. அதற்காக அந்த நாளில் மட்டும்தான் பெண்களைக் கொண்டாட வேண்டும், பெருமைப்படுத்த வேண்டும் என்பதில்லை. மாதங்கள் முழுதும், வருடங்கள் முழுதும், ஏன் மொத்த வாழ்க்கையிலுமே தங்களைச் சூழ்ந்துள்ள பெண்மையைக் கொண்டாட விரும்புகிறவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

  • மாவீரர் சத்ரபதி சிவாஜியின் வெற்றிக்குப் பின்னிருந்து அவரை ஆட்டுவித்த சக்தி அவரது தாயார் ஜீஜாபாய் என்பார்கள்.
  • நமது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனின் மாபெரும் வெற்றிகளின் பின்புலமாயிருந்து அவரை இயக்கிய சக்தியாகக் கருதப்பட்டவர் அவரது அக்கா (அக்கை) குந்தவை நாச்சியார்.
  • இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் அஹிம்சா கொள்கையோடு காந்திஜீ முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களின் பின் உறுதுணையாய் உடன்நின்றவர் அன்னை கஸ்தூரி பாய், 
  • அக்னிக் குஞ்சாகிக் கனன்றுகொண்டே எழுச்சி மிகுந்த தேசபக்திப் பாடல்கள் பல தந்த மகாகவிக்கொரு உற்ற துணையானார் செல்லம்மா! 
  • திராவிடக் கழகத் தந்தை ஈவெரா பெரியார் முன்னெடுத்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின்போது அவர் கைதான பின்பும் இந்தியாவெங்கும் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று மகாத்மாவால் பாராட்டப்பட்ட பெண்கள் இருவர், ஒருவர் பெரியாரின் மனைவி நாகம்மை, மற்றவர் அவரது தங்கை கண்ணம்மை.
  • இவ்வுலகில் நீடுழி வாழத்தக்க ஆயுளைத் தரக்கூடிய அதிசய நெல்லிக்கனியைத் தானுண்ணாது தனது நண்பரான மன்னர் அதியமானுக்கு அளித்தவர் அவ்வைப் பாட்டி! காரணம் மன்னனான அவன் நீண்ட காலம் வாழ்ந்தால் நாட்டு மக்களுக்கு மேலும் பல நன்மைகள் புரிவான் என்ற நம்பிக்கையே! 

இப்படித் தமது மகனின், தனயனின், கணவரின், நண்பனின் காரியங்கள் யாவிலும் கைகொடுத்து, அவர்களுக்காகத் தமது செளகரியங்களை விட்டுக்கொடுத்து உற்றதுணையாக நின்ற வாழ்க்கைத்துணைகளும், உறவுகளும், நட்புகளுமான உதாரணங்கள் சரித்திரம் நெடுகிலும் நம்மிடையே அநேகம் பேர் உண்டு.

இவர்களுக்குக் கிடைத்தாற்போல் மேலான பெண் உறவொன்று உங்களுக்கும் கிடைத்திருக்கலாம். அந்த உறவால் உங்கள் வாழ்வு மேன்மை அடைந்திருக்கலாம்.

இப்படித் தங்களது வாழ்வின் சிறந்ததனைத்தையும் கையளித்தோ, விட்டுக்கொடுத்தோ, வழிகாட்டியோ, ஒப்புக்கொடுத்தோ உங்களது வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அந்தப் பெண்ணை தினமணி இணையதளம் மூலமாக உலகுக்கு அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு.

உங்களது வெற்றிகளுக்குப் பின்னால் மையம் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பெருமையை உலகறியச் செய்யுங்கள்.

அவர்களைப் பற்றி பெருமையுடன் தினமணியில் நினைவுகூருங்கள்!

உங்களது வெற்றிக்கு வித்திட்ட பெண்மணியின் புகைப்படம், அவரைப் பற்றிய விவரங்கள், மேற்குறிப்பிட்ட வெற்றிகரமான பெண்மணிகளைப்போல எந்தெந்த விதத்திலெல்லாம் அவர் உங்களது வெற்றிக்கு வித்திட்டார், உதவினார் என்பது குறித்து சுவாரஸ்யமாக விவரித்து சிறு குறிப்புடன் உங்களது பதிவுகளை எங்களுக்கு அனுப்புங்கள். 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் நிச்சயம் ஒரு பெண்  இருப்பார். அந்தப் பெண் அவரது அம்மாவாகவோ, பாட்டியாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, அத்தை, சித்தி, மாமியார் உள்ளிட்ட இன்னபிற உறவுகளாகவோ இருக்கலாம். வாழ்வில் வெற்றி என்பது நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் வழிகாட்டுதலின் மூலமாக மட்டும்தான் வர வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில் அதிகப்படியான தலைகுனிவும், அவமதிப்புகளும்கூட ஒரு மனிதனின் முதுகெலும்பைத் தட்டி நிமிர்த்தி தலை நிமிரச் செய்வதாக வாழ்வின் சூழல் அமைந்துவிடும். நம்மை ஊக்கப்படுத்தி வெற்றியை நோக்கி நடைபோடச் செய்ய பல சந்தர்பங்களில் நேர்மறை உத்திகளைவிட எதிர்மறை உத்திக்கு அதிகம் பலமிருக்கக்கூடும். எனவே எந்தவகையிலேனும் உங்களது வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என நீங்கள் கருதும் பெண்களைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.

உங்களது பதிவுகள் வழியாக அறிமுகமாகவிருக்கும் வெற்றிக்கு வித்திட்ட பெண்களில் சிறந்த மூவருக்கு தினமணி இணையதளத்தின் சார்பாக பட்டுப்புடவை பரிசுகள் உண்டு.

பதிவுகள் எங்களை வந்தடைய வேண்டிய கடைசித் தேதி

31.3.18

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

dinamani.readers@gmail.com

 

கடிதம் மூலமாகப் பகிர விரும்புகிறவர்கள்

தினமணி இணையதளம்,

எக்ஸ்பிரஸ் கார்டன்,

29, இரண்டாவது பிரதான சாலை,

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600 058

எனும் முகவரிக்கு அனுப்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com