டாய்லெட் சுத்தம் செய்வதில் ஆசிட், ஹார்பிக்குக்கு ‘நோ’ சொல்லுங்க பாக்டீரியாவுக்கு ‘எஸ்’ சொல்லுங்க!

செப்டிக் டேங்குகள் மற்றும் பாத்ரூம் டாய்லெட்டுகளை சுத்தம் செய்ய பெரும்பாலும் ஆசிடுகள் (அமிலங்கள்) பயனபடுத்தப் படுகின்றன. இது முற்றிலும் தவறான முறை.
டாய்லெட் சுத்தம் செய்வதில் ஆசிட், ஹார்பிக்குக்கு ‘நோ’ சொல்லுங்க பாக்டீரியாவுக்கு ‘எஸ்’ சொல்லுங்க!

இன்று இந்தியா முழுவதுமிருக்கிற ஒரே மிகப்பெரிய பிரச்னை கழிவு நீர் சுத்திகரிப்பு தான். கழிவுநீரை முறையாகச் சுத்திகரிக்க முடிந்தால் நாம் நீர் மேலாண்மை பற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை என்கிறார் இந்தப் பெரியவர். காரணம் கழிவுநீர் சுத்திகரிப்பில் மிக மோசமானதாகக் கருதப்படுவது மனித திடக் கழிவுகளைச் சேகரிக்கும் செப்டிக் டேங்குகள் அல்லது கழிவுநீர்க் குட்டைகளைச் சுத்தம் செய்வது தான். மிக எளிதான முறையில் இந்த செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய முடிவதோடு மனிதக் கழிவுகளை முற்றிலுமாக இல்லாமலாக்கி அந்தக் கழிவுநீரை சுத்திகரிக்க முடியுமென்றால் அது நிச்சயம் அருமையான வழிமுறையாகத் தான் இருக்கக் கூடும்.

மனிதக் கழிவுகளை உண்ணக்கூடிய பாக்டீரியாக்களை வாங்கி செப்டிக் டேங்குக்குள் ஒருமுறை போட்டு விட்டால் போதும். அவை உள்ளிருக்கும் திடக் கழிவுகளை உண்ட பின்பு வெறும் நீர் மட்டுமே செப்டிக் டேங்குகளில் மிஞ்சும். அந்த நீரில் தற்போது மனித சிறுநீரில் இருக்கக் கூடிய யூரியா மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள் இத்தகைய கழிவுநீர் மேலாண்மையில் அக்கறையும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்டவர்கள். இப்போது சுத்திகரிக்கப்பட்டு யூரியா மட்டுமே மீந்த இந்த நீரை காய்கறிச் செடிகளுக்கு ஊற்றலாம். அது மிகச்சிறந்த ஆர்கானிக் உரமாகவும் செயல்படும் என்கிறார்கள் தோட்டக்கலைத்துறையினர்.

செப்டிக் டேங்குகள் மற்றும் பாத்ரூம் டாய்லெட்டுகளை சுத்தம் செய்ய பெரும்பாலும் ஆசிடுகள் (அமிலங்கள்) பயனபடுத்தப் படுகின்றன. இது முற்றிலும் தவறான முறை. அமிலங்கள் பயன்படுத்துவதால் செப்டிக் டேங்க்குகளில் விஷவாய்ய்க்கள் உருவாகி அவற்றைச் சுத்தம் செய்வதற்காக மனிதர்கள் உள்ளிறங்குகையில் உயிர்ப்பலி நேரிட்டு விடுகிறது. அது மட்டுமல்ல கழிவுநீரும் சுத்திகரிக்க இயலாத வண்ணம் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. கழிவுநீர் மேலாண்மையில் இது மிக மோசமான அணுகுமுறை. அப்படிச் செய்யக் கூடாது. செப்டிக் டேங்கில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய மனிதமலம் உண்ணும் பாக்டீரியாக்களை 10 வருட்னக்களுக்கு ஒருமுறை செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டால் போதும். பிறகு அதைப்பற்றி வருந்தாமல் செப்டிக் டேங்கில் சேரும் திரவக் கழிவுநீரை அப்படியே எடுத்து வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தலாம். அதே போல வீட்டிற்குள் டாய்லெட்டுகளை சுத்தம் செய்ய விரும்பும் போது ஆரஞ்சு, லெமன் உள்ளிட்ட பொருட்களை தோலோடு காயவைத்து நன்கு காய்ந்த பின் அப்படியே மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவை கொண்டு டாய்லெட்டுகளைச் சுத்தம் செய்தால் விஷ வாயுக்கள் உருவாவதைத் தடுக்க முடிவதோடு நமது வீட்டுத் தோட்டங்களுக்கு அருமையான ஆர்கானிக் உரமும் கிடைக்க உத்தரவாதமளிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com