பார்ப்பதற்கு சிறிய நெல்மணியளவே இருக்கிறது அந்த மைக்ரோசிப். அதை நமது கைகளுக்குள் இஞ்ஜெக்ட் செய்தால் போதும். பிறகு நமக்கு கிரெடிட் கார்டுகள் தேவை இல்லை, கார் சாவி தேவையில்லை, பஸ் மற்றும் டிரெயின் டிக்கெட்டுகள் தேவையில்லை. இதெல்லாம் நம்மைப் பொறுத்தவரை பகற்கனவுகளாக இருக்கலாம். ஆனால், ஸ்வீடனில் இதை சாத்தியப் படுத்தி இருக்கிறார்கள். தொழிற்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் தனிமனிதர்களின் தகவல்களைத் திருடுதல் என்பது ஆட்சேபணைக்குரியது மட்டுமல்ல கடும் கண்டனத்துக்குரிய குற்றம் என்ற ரீதியில் உலக நாடுகள் தகவல் திருட்டுக்கு எதிராக போராடி வருகையில் ஸ்வீடனில் இப்படி ஒரு புது முயற்சி தனி மனிதர்களின் தகவல் திருட்டு சமாச்சாரங்களுக்கு உறுதுணையாக அமைவதைப் போல கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பது பிற நாடுகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.