நம்மூரில் காலி டிரம்கள் பெரும்பாலும் தண்ணீர் பிடித்து வைக்கத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொஞ்சமே கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும், ஆர்வமும், பொறுமையும் கையில் கொஞ்சம் காசும் இருந்தால் போதும், இதோ இந்த வீடியோவில் காணும் குட்டிக் குட்டி கியூட் ஐடியாக்களைக் கூட காலி டிரம்களை வைத்து செய்து பார்க்கலாம். வீட்டுக்கு பயனுள்ளதாக மாறுவதோடு அந்தப் பொருட்களின் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப நல்லதொரு செய்தொழிலும் கிடைக்கும்.
இந்தக் காணொளியில் காலி டிரம்களை வைத்து வரவேற்பறை சோஃபாக்கள், டேபிள்கள், அடுக்குப் பூந்தொட்டிகள், தந்தூரி அடுப்புகள், சி.டி, டிவிடி ரேக்குகள், கார்டன் சேர்கள், லாக்கர்கள், வார்ட் ரோப்கள், புத்தக அலமாரிகள், வாஷ்பேசின் சிங்க்குகள், மருத்துவமனை காத்திருப்பு சேர்கள், பார் டேபிள்கள், சமையலறை அலமாரிகள் எனப் பல வீட்டு உபயோகப் பொருட்களை முயன்று பார்த்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு பயனுள்ளவையாகவும் உள்ளன. ஹை ஸ்கூல் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இம்மாதிரியான கிரியேட்டிவ் உபகரணங்கள் செய்யும் நுட்பமான முறைகளையும் கற்றுக் கொண்டு தங்களது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு பொருளைத் தங்களது கைத்திறனில் உருவாக்கி பரிசளிக்கலாம். மிக அருமையான பொழுது போக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் பெரிய அளவில் வருமானமீட்டித் தரக்கூடிய தொழிலாகவும் இதை மாற்றிக் கொள்ள முடியும்.
Related Article
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் 'கிண்டில் லைட்' செயலி: அமேசான் அறிமுகம்!
இதை ஃபேஸ்புக்கில் பகிர முடியுமா? முடியாதா? ஃபேஸ்புக் இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் மார்க்!
நிதி உதவி வேண்டுமா? உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை எல்லாமும் அதற்கு மேலும் இவற்றில் கிடைக்கும்!
ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் முத்திரைப் பதித்த ஆப்பிள்: போட்டியின்றி முதலிடம்!
500 பேரிடம் ஒரே சமயத்தில் பேச வேண்டுமா? இதோ வந்துவிட்டது சோமா வீடியோ கால் மற்றும் சாட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடகோவை ரயில் நிலையத்தில்! பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகை அகற்றம்

விற்பனைக்கு கஞ்சா பதுக்கியவா் கைது: 1.100 கிலோ பறிமுதல்

வையம்பட்டி அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



