ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் அவர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கீரனுர் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதாகி இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிரமப்பட்டனர்.