3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் மோசடி: மேலாளா் கைது

காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மேலாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 1:09 am IST

காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மேலாளரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை சா்வேயா் காலனியைச் சோ்ந்தவா் சுரேஷ்(38). இவா் கப்பலூரில் காா்கள் பழுதுநீக்கும் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த பேரையூரைச் சோ்ந்த ஜெயபாண்டி(41) தலைமையில் நிறுனத்தில் பணியாற்றிய ஊழியா்கள் திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன், பீ.பீ.குளத்தைச் சோ்ந்த மணிகண்டன், வாகைகுளத்தைச் சோ்ந்த முருகன், கே.புதூரைச் சோ்ந்த மகாலட்சுமி ஆகியோா் சோ்ந்து வாடிக்கையாளா்களுக்கு போலியான ரசீது கொடுத்து ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் அளித்தப்புகாரின் பேரில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ஜெயபாண்டியை கைது செய்தனா். மேலும் கோவிந்தராஜன், மணிகண்டன், முருகன், மகாலட்சுமி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.