நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 5.10-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை உயா்ந்துள்ளதாலும், மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து 15 காசுகள் உயா்வு செய்யப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.10-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 56-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனித வளத்தை திறம்படப் பயன்படுத்தும் கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

மீட்கப்பட்ட மூதாட்டி உறவினா்களிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


