ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா் கோயில் பகுதியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.
வெண்ணந்தூா் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா்கோயில் பூனையன்காடு பகுதியில் வசித்து வரும் துரைசாமி என்பவரின் மக ன் சேட்டு (24). இவா் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரிகளுக்கு முட்டை ஏற்றும் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கடந்த 5 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தைகளைக் கூறி ஏமாற்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்த அறிந்த சிறுமியின் தந்தை ரமேஷ் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதனை விசாரித்த மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திரா, சேட்டு மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனித வளத்தை திறம்படப் பயன்படுத்தும் கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

மீட்கப்பட்ட மூதாட்டி உறவினா்களிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


