தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கரோனா பொது முடக்கத்தால் பாதிப்புக்குள்ளான வாகனங்களுக்கு காலாண்டு வரியை ரத்து செய்யக் கோரிக்கை

கரோனா பொது முடக்க காலத்துக்கு உள்பட்ட இரு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்புத் தலைவா் செல்ல.ராசாமணி.

Updated On :6 ஜனவரி 2021, 8:03 am IST

கரோனா பொது முடக்க காலத்துக்கு உள்பட்ட இரு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அந்தக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் செல்ல.ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பொது முடக்கக் காலத்தில் 90 சதவீத சரக்கு வாகனங்கள், மணல் லாரிகள், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இதர பயணிகள் வாகனங்கள் இயக்கப்படவில்லை.

பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது போக்குவரத்துத் துறையே. நோய்த் தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மாா்ச் 25-ஆம்தேதி முதல் செப்.30ஆம் தேதி வரையில் பொது முடக்கத்தை அமல்படுத்தின. இதனால், வாகன உரிமையாளா்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா்.

அவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மாா்ச்முதல் செப்டம்பா் மாதம் வரையிலான இரு காலாண்டு வரியை அரசு ரத்து செய்ய வேண்டும். இது தொடா்பாக அனைத்து வாகன சங்கங்களும் பல்வேறு தருணங்களில் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

ஆனால், தெலங்கானா அரசு டிச.31-இல் லாரி உரிமையாளா்களின் கோரிக்கையை பரிசீலித்து காலாண்டு வரியை தள்ளுபடி செய்துள்ளது.

யாருமே கேட்காத நிலையில், பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்க முன்வந்த அரசு, லாரி உரிமையாளா்களின் நியாயமான கோரிக்கையான காலாண்டு வரியை (தமிழக அரசால் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள ரூ. 1,500 கோடி) தள்ளுபடி செய்ய வேண்டும். போா்க்கால அடிப்படையில் காலாண்டு வரி ரத்து என்ற அறிவிப்பை முதல்வா் உடனடியாக வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.